செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி தேவஸ்தான ஓய்வூதியதாரர்கள் கொரோனா நிவாரணத்திற்கு ரூ. 44.21 லட்சம் நிதி

Published On 2020-05-08 11:20 GMT   |   Update On 2020-05-08 11:20 GMT
ஆந்திர முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருப்பதி தேவஸ்தான ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் ரூ. 44.21 லட்சம் நன்கொடையாக வழங்கினர்.
திருமலை:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் கோவிந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினர். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.44 லட்சத்து 21 ஆயிரத்து 950 நன்கொடையாக திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.

இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News