செய்திகள்
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

ரெயிலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- ம.பி. முதல்வர் அறிவிப்பு

Published On 2020-05-08 05:44 GMT   |   Update On 2020-05-08 05:44 GMT
அவுரங்காபாத்தில் ரெயிலில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தூர்:

மகாராஷ்டிராவில் தங்கி வேலை பார்த்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேற்று சொந்த ஊருக்கு செல்லும் ரெயிலை பிடிப்பதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றனர். நடந்த களைப்பில் நேற்று இரவு அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். 

இன்று அதிகாலை அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்து, அவுரங்காபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலையும் கவலைகளையும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், ரெயில் மோதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News