செய்திகள்
சாலை விபத்து

மரத்தில் டிரக் மோதி கவிழ்ந்தது- 5 பேர் உயிரிழப்பு

Published On 2020-03-14 09:01 GMT   |   Update On 2020-03-14 09:01 GMT
அசாம் மாநிலத்தில் சாலையோர மரத்தில் டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
தங்லா:

அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் சென்ற டிரக், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் வேன் கடுமையாக சேதமடைந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். அனைவரும் மங்கல்டாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில், பலத்த காயமடைந்த 14 பேர் மேல் சிகிச்சைக்காக கவுகாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருமணம் ஆன புதுப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சர்பானந்த சோனோவல் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
Tags:    

Similar News