செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சர்வதேச மகளிர் தினம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Published On 2020-03-08 03:05 GMT   |   Update On 2020-03-08 03:05 GMT
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெண்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் தங்கள் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய தனித்துவமிக்க சாதனைப் பெண்களை வாழ்த்துவதே மகளிர் தினமாகும்.

இந்த நேரத்தில் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு அளிக்கும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்த உறுதி ஏற்போம். இதன்மூலமே அவர்கள் தங்கள் இலக்கினை நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் தடையின்றி அடைய முடியும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News