செய்திகள்
டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 44 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் 44 பேரும், ஆர்எம்எல் மருத்துவமனையில் 5 பேரும், எல்என்ஜேபி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 53 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.