செய்திகள்
விபத்தில் சிக்கிய சரக்கு ரெயில்கள்

சரக்கு ரெயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி - மத்திய பிரதேசத்தில் சோகம்

Published On 2020-03-01 07:16 GMT   |   Update On 2020-03-01 08:33 GMT
மத்திய பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் இருசரக்கு ரெயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
போபால்:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று தேசிய அனல்மின் கழகத்திற்கு புறப்பட்டு சென்றது.  இதேபோல் காலியான மற்றொரு சரக்கு ரெயில் எதிர்புறத்தில் இருந்து வந்தது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் சிங்ரவுலி பகுதியில் வந்தபோது இரு சரக்கு ரெயில்களும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 13 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரெயில்களின் டிரைவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர்வாசிகளும் மீட்பு பணியில் உதவினர்.
Tags:    

Similar News