செய்திகள்
தேர்தல் ஆணையம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published On 2020-02-07 15:05 GMT   |   Update On 2020-02-07 15:05 GMT
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த நோட்டீசுக்கு நாளை மாலை 5 மணிக்குள் பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ள வாக்குப்பதிவு காரணமாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்த நோட்டீசுக்கு நாளை மாலை 5 மணிக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News