செய்திகள்
பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் பலி

Published On 2020-02-05 07:29 GMT   |   Update On 2020-02-05 07:29 GMT
காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள ஷெல்டேங் பகுதியில் ராணுவத்தினர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 
Tags:    

Similar News