செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்

கோட்டா மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் 110 ஆக அதிகரிப்பு

Published On 2020-01-05 04:40 GMT   |   Update On 2020-01-05 04:40 GMT
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மரணம் 110 ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் கோட்டா தொகுதியில் உள்ள ஜே.கே.லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு 110 ஆக உயர்ந்துள்ளது. 

டிசம்பர் மாதம் 100 குழந்தைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 10 குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 
மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா நேற்று நேரில் சந்தித்து ஆறுதல்  கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News