செய்திகள்
தீவிபத்து (கோப்புப்படம்)

டெல்லியில் இன்று தொழிற்சாலையில் தீவிபத்து

Published On 2020-01-02 09:00 GMT   |   Update On 2020-01-02 09:00 GMT
டெல்லி மேற்கு பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
புதுடெல்லி:

டெல்லி மேற்கில் பீர கார்கி பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 35 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுக்குள் சிக்கினார்கள். 13 தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலாளி ஆகிய 14 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News