செய்திகள்
துப்பாக்கி சூடு

பீகாரில் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை

Published On 2019-12-28 07:07 GMT   |   Update On 2019-12-28 07:07 GMT
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரை, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
பாட்னா:

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் யாதவ். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் இன்று காலை சினிமா சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்தனர். ராகேஷ் யாதவ் சுதாரிப்பதற்குள், அந்த நபர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ராகேஷ் யாதவ், உடனடியாக சப்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

யாதவ் தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து 3 கிமீ தூரம் நடந்து சினிமா சாலையில் உள்ள ஜிம்முக்கு வருவார் என கூறப்படுகிறது. இதனை கவனித்த கொலையாளிகள், இன்று காலையில் அவரை தீர்த்து கட்டியுள்ளனர். 

கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News