செய்திகள்
குஜராத்: அரபிக்கடலில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் பலி
குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட அரபிக்கடலில் இன்று படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன ஒருவரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட கிர் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் 3 படகுகள் மூலம் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ராஜபாரா துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது வேகமாக வீசிய பேரலைகளில் சிக்கி படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.
இதேபோல், தேவ்பூமி துவாராகா அருகே அரபிக்கடலில் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் ஒரு படகு கவிழ்ந்ததில் மற்றொரு மீனவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மொத்தம் 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீட்புப் படையினரால் 18 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட கிர் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் 3 படகுகள் மூலம் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ராஜபாரா துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது வேகமாக வீசிய பேரலைகளில் சிக்கி படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.
இதேபோல், தேவ்பூமி துவாராகா அருகே அரபிக்கடலில் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் ஒரு படகு கவிழ்ந்ததில் மற்றொரு மீனவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மொத்தம் 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீட்புப் படையினரால் 18 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.