செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு:
மங்குச்சக் என்ற இடத்தில் உள்ள எல்லைக்கோடு வழியாக நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்தியாவுக்குள் ஊடுருவியதை கவனித்து அவரை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முன்னேறிய அந்நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவருடன் வேறு யாரேனும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றார்களா? என அப்பகுதியில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம், நவ்ஷேரா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மங்குச்சக் என்ற இடத்தில் உள்ள எல்லைக்கோடு வழியாக நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்தியாவுக்குள் ஊடுருவியதை கவனித்து அவரை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முன்னேறிய அந்நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவருடன் வேறு யாரேனும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றார்களா? என அப்பகுதியில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.