செய்திகள்
சிறுநீரகம்

சிகிச்சைக்கு வந்த சிறுவனிடம் சிறுநீரகம் திருடிய டாக்டர்

Published On 2019-12-05 03:16 GMT   |   Update On 2019-12-05 03:16 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தன. இதனையடுத்து அவனை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவரது தந்தை அனுமதித்தார். பிரேம் மோகன் மிஸ்ரா என்ற டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார்.

ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனையடுத்து சிறுவனை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிறுவனை சோதனை செய்த டாக்டர்கள், சிறுவனின் ஒரு சிறுநீரகம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரேம் மோகன் மிஸ்ரா தனது மகனின் சிறுநீரகத்தை திருடி விட்டதாக சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News