செய்திகள்
நிலநடுக்கம்

மணிப்பூரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

Published On 2019-10-03 12:46 GMT   |   Update On 2019-10-03 12:46 GMT
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.
இம்பால்:  

மணிப்பூர் மாநில தலைநகரான இம்பால் நகரில் இன்று காலை 11.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 40 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அதிர்வு காரணமாக இம்பால் மாவட்டம் வான்கேய் ஆன்றோ பேருந்து நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த இருவர்மீது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Tags:    

Similar News