செய்திகள்
மழையால் இடிந்து விழுந்த வீடு

ஜார்க்கண்டில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

Published On 2019-09-30 10:36 GMT   |   Update On 2019-09-30 10:36 GMT
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
தும்கா:

உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

அவ்வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் தும்கூர் மாவட்டம், அம்ஜர் கிராமத்தில் பெய்த தொடர் மழையால் நேற்று நள்ளிரவில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி மராண்டி, அவரது மனைவி லுக்கி, தாய் அம்தர் முர்மு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பிள்ளைகளும் வேறு அறையில் தூங்கியதால்  உயிர்பிழைத்தனர். இதேபோல் அப்பகுதியில் மேலும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழையால் அதிக பாதிப்புக்குள்ளான அந்த கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், போர்வைகள், தார்பாய்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News