செய்திகள்
கேரளாவின் கவர்னராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்
கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரம்:
தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார்.
முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கேரளா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆரிப் முகமது கானுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலயில், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.