செய்திகள்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

Published On 2019-08-23 05:11 GMT   |   Update On 2019-08-23 05:11 GMT
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இம்மனுவை விசாரிக்க உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ முறைப்படி தெரிவிக்கும். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. சிதம்பரம் ஏற்கெனவே கைதாகி விட்டதால் அவரது மனு தள்ளுபடியாக அதிக வாய்ப்பு உள்ளது. 

இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் சிபிஐ விசாரணைக் காவல் முடிந்ததும், அவருக்கு ஜாமீன் பெறக் கூடிய சூழ்நிலை இருந்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் அவர் கைது செய்யப்படலாம். 

எனவே, இந்த கைது நடவடிக்கையில் இருந்து ப.சிதம்பரத்தை பாதுகாப்பதற்காக அவரது வழக்கறிஞர்கள் மற்றொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. இதற்காக தனியாக மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News