செய்திகள்
தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது

Published On 2019-07-18 08:25 GMT   |   Update On 2019-07-18 08:25 GMT
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் உறவினர் ஒருவரை, பணம் பறிப்பு வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை:

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்பர். இவரது மகன் ரிஸ்வான் கஸ்கர் நேற்று இரவு மும்பையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். 

பணம் பறிப்பு வழக்கில் அவரை கைது செய்துள்ளனர். நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது அவரை கைது செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தாவூத் இப்ராகிமின் கூட்டாளிக்கு மிக நெருக்கமான அகமது ரஸா வதாரியா என்பவரை மும்பை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது ரிஸ்வான் கஸ்பரின் பெயரை கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் ரிஸ்வான் கஸ்பரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News