செய்திகள்
கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம்.. எடியூரப்பா ஆடும் கிரிக்கெட் ஆட்டம்
கர்நாடகா மாநிலத்தின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வரான எடியூரப்பா எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு 18ம் தேதி(நாளை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதனால் கர்நாடகா மாநில அரசியலில் மாபெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்களை அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா காணச் சென்றார்.
அப்போது ஓட்டலில் உள்ள மைதானத்தில் எம்எல்ஏக்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் குழப்பங்கள் பல ஏற்பட்டுள்ள நிலையில் மகிழ்ச்சியாக எடியூரப்பா கிரிக்கெட் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. இதனை சபாநாயகர் ஏற்ககோரி 15 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என இன்று காலை தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு 18ம் தேதி(நாளை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதனால் கர்நாடகா மாநில அரசியலில் மாபெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்களை அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா காணச் சென்றார்.
அப்போது ஓட்டலில் உள்ள மைதானத்தில் எம்எல்ஏக்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் குழப்பங்கள் பல ஏற்பட்டுள்ள நிலையில் மகிழ்ச்சியாக எடியூரப்பா கிரிக்கெட் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.