செய்திகள்
ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அதிகாரி... முறையாக பழிவாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான முறைகேடு வழக்குகளில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
அமராவதி:
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.
இதன்படி கட்டிடமும் தரைமட்டமாக இடிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பணமோசடி வழக்குகளை விசாரித்த சீனிவாச காந்திக்கு எதிராக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். காந்தி, தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இதில் தெலுங்கு தேசம் கட்சியின் உதவியோடு தங்கள் குடும்பத்தினர் மீதும், தன் மீதும் அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது எனவும், பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சீனிவாச காந்திக்கு சொந்தமான இடங்களுக்குச் சென்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்த அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ. 3 கோடியே 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சீனிவாச காந்தி, அவரது மனைவி, மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தின்போது, அவரது வீட்டின் அருகே ரூ.5 கோடி செலவில் பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை என்பதால் சிறிதும் மனம்மாறாமல், ‘குற்றம் செய்தது அரசியல்வாதியாக இருந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படாது’ எனக் கூறி அதனை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
இதன்படி கட்டிடமும் தரைமட்டமாக இடிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பணமோசடி வழக்குகளை விசாரித்த சீனிவாச காந்திக்கு எதிராக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். காந்தி, தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை உதவி இயக்குநராக இருந்த சீனிவாச காந்தி, சோதனை என்கிற பெயரில் தன்னை வேட்டையாடுவதாக ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியிடம் புகார் கூறினார்.
இதில் தெலுங்கு தேசம் கட்சியின் உதவியோடு தங்கள் குடும்பத்தினர் மீதும், தன் மீதும் அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது எனவும், பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சீனிவாச காந்திக்கு சொந்தமான இடங்களுக்குச் சென்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்த அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ. 3 கோடியே 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சீனிவாச காந்தி, அவரது மனைவி, மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.