செய்திகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை

Published On 2019-05-25 21:57 GMT   |   Update On 2019-05-25 21:57 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலந்த்சாகர்:

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் தாதுரி கிராமத்தில் நேற்று 3 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தனர். ஒரு ஆழ்துளை கிணறு அருகே அவர்கள் உடல்கள் கிடந்தன. ஒவ்வொருவர் உடலிலும் தலா 2 குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்தன. 3 பேரும் அருகில் உள்ள பைசலாபாத் நகரை சேர்ந்த அஸ்மா, அலீம், அப்துல்லா என்றும் அருகருகே வசித்து வந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

9 வயது முதல் 11 வயது வரை உள்ள அவர்களை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்து இருந்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த படுகொலையில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகிறார்கள். இதற்கிடையே கடமை தவறிய 3 போலீசாரை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்துள்ளனர். 
Tags:    

Similar News