செய்திகள்
ரெயில் கூரைமீது ஏறி செல்பி எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
மத்தியபிரதேசம் மாநிலத்தில் இன்று ரெயிலின் கூரைமீது ஏறி செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் உயரழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MPteen #MPteenelectrocuted #teenelectrocuted #selfiedeath
இந்தூர்:
மத்தியபிரதேசம் மாநிலம், ஜபுவா மாவட்டத்துக்குட்பட்ட பேருகர் ரெயில் நிலையத்தின் அருகே நின்றிருந்த ஒரு மின்சார ரெயிலின் கூரைமீது ஏறிநின்ற ஒரு சிறுவன் தனது கைபேசியால் செல்பி எடுக்க முயன்றான்.
அப்போது, அவனது தலை எதிர்பாராத விதமாக மேலே இருந்த உயரழுத்த மின்கம்பியில் பட்டது. இதனால், மின்சாரம் தாக்கிய அந்த சிறுவன் உடல் கருகிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தான்.
பலியான சிறுவனின் பெயர் பங்கஜ்(16) என தெரியவந்துள்ள நிலையில், அவனது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரெயில்வே போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MPteen #MPteenelectrocuted #teenelectrocuted #selfiedeath