செய்திகள்

மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதா போட்டியிட ரசிகர்கள் வற்புறுத்தல்

Published On 2019-02-02 10:28 GMT   |   Update On 2019-02-02 10:28 GMT
பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதா போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியதையடுத்து அவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். #ActressSumalatha #Mandya
மாண்டியா:

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் கர்நாடக மந்திரியுமான அம்பரீஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

காங்கிரசை சேர்ந்த அவர் மாண்டியா தொகுதி எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.

அம்பரீஷ் மறைவை தொடர்ந்து அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

நேற்று சுமலதாவை அம்பரீஷின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் சந்தித்து மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இதுபற்றி சுமலதா கூறும்போது, “என்னை மக்கள் எவ்வளவு ஏற்று கொண்டார்கள் என்பதை பொறுத்து தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு எடுப்பேன். மாண்டியா தொகுதி மக்களின் உணர்வுகள் குறித்து நான் ஆராய வேண்டும்” என்றார்.

இதற்கிடையே தேர்தலில் போட்டியிட சுமலதா முடிவு செய்துள்ளார். முதல்வர் குமாரசாமியின் ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட விரும்பினார்.

ஆனால் மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகிலுக்கு சீட் வழங்க வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள். எனவே சுமலதா சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

மாண்டியா பகுதியில் அம்பரீசுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் அவரது மரணத்தினால் ஏற்பட்டுள்ள அனுதாப அலை காரணமாக சுமலதா எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்றும், அத்துடன் கன்னட திரையுலகமும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டால், அதன் மூலம் சுமலதாவிற்கு மேலும் பலம் கூடும் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும், சுமலதா மாண்டியா தொகுதியில் போட்டியிடாத வகையில், அவரது மனதை மாற்றவும் ஜே.டி.எஸ். தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். #ActressSumalatha #Mandya

Tags:    

Similar News