செய்திகள்

பீகாரில் லாலு கட்சி தலைவர் சுட்டுக்கொலை

Published On 2019-01-24 09:25 GMT   |   Update On 2019-01-24 09:25 GMT
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரகுவர்ராய் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாட்னா:

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் கல்யாண்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ரகுவர்ராய். இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இன்று காலை இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் குண்டு பாய்ந்து ரகுவர்ராய் அதே இடத்தில் பலியானார்.
Tags:    

Similar News