செய்திகள்

ஒடிசாவில் லாரி கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி, 25 பேர் படுகாயம்

Published On 2019-01-22 09:21 GMT   |   Update On 2019-01-22 10:24 GMT
ஒடிசாவில் உள்ள கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். #Odisha #truckoverturns
பலிகுடா:

ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் சுமார் 40-50 பேர் கதாபூரில் இருந்து பிராமணிகான் நோக்கி பயணம் செய்துள்ளனர். 



பொய்குடா மலைப் பகுதியில்  உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி, பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது.

இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  #Odisha #truckoverturns
Tags:    

Similar News