செய்திகள்

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Published On 2018-11-13 12:31 GMT   |   Update On 2018-11-13 14:29 GMT
ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் இன்று ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #terroristkilled #infiltrationbid
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அக்னூர் எல்லைக்கோட்டின் அருகேயுள்ள பல்லன்வாலா பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து ஒரு பயங்கரவாதி ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றான். இதை கவனித்த நமது ராணுவத்தினர் அவனை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர்.

இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறி வந்தான். நமது வீரர்கள் நடத்திய எதிர்தாக்குதலில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவன் வைத்திருந்த ஏ.கே.47 ரக இயந்திர துப்பாக்கி, 5 கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதேபோல், இம்மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மேலும் இரு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். #terroristkilled #infiltrationbid 
Tags:    

Similar News