செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2018-08-14 20:16 GMT   |   Update On 2018-08-14 20:16 GMT
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 139 அடியாக உயர்ந்துள்ளாதால் இன்று நள்ளிரவு 2 மணிக்கு அணை திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்:

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பினால் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணை இன்று நள்ளிரவு 2 மணிக்கு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீர்மட்டம் 139 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படுவதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News