செய்திகள்
உடல்நலம் குன்றிய வாஜ்பாயை மூன்றாவது முறையாக சந்தித்த பிரதமர் மோடி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #PMModi #Vajpayee
புதுடெல்லி:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 11-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூப்பு தொடர்பான தேசிய மையத்திற்கான அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே உள்ள சப்தர்ஜுங் மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை, அன்சாரி நகர் மற்றும் விபத்து முகாமிற்கு இடையே மோட்டார் சுரங்கப்பாதை வசதியை தொடங்கி வைத்தார். #PMModi #Vajpayee
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 11-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், 92 வயதான வாஜ்பாயை பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 10-15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.