search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடல் பிகாரி வாஜ்பாய்"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 



    மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 

    அவரது உடலுக்கு பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நாளை பொதுவிடுமுறை அறிவித்துள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளன. மேலும், நாளை ஒருநாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சமாதி அமைந்ந்துள்ள விஜய் காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க அரசு 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு குடும்பத்தினர், பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    கார்கில் போர், அணுகுண்டு சோதனை என இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்க வைத்த வாஜ்பாய் எனும் தலைவர் என்றும் வரலாற்றில் இருப்பார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கியவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். பிரதமர் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றவர். 

    மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் படித்த அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

    வாஜ்பாயின் அரசியல் பயணம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இருந்து தொடங்கியது. தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று கைதாகி சிறை சென்றார். 23 நாட்கள் அப்போது சிறைவாசம் அனுபவித்தார்.



    பாஜகவின் தாய் இயக்கமான ஜன சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் சீடராக இணைந்த வாஜ்பாய் அரசியலில் கால் பதிக்க தொடங்கினர். 1957-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

    தனது பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட வாஜ்பாய், பின்னாளில் நாட்டின் பிரதமராக வருவார் என அப்போதைய பிரதமர் நேரு சிலாகித்து புகழ்ந்துள்ளார். எமர்ஜென்சியில் சிறை சென்ற வாஜ்பாய், எமர்ஜென்சிக்கு பின்னர் ஜனதா கூட்டணியாக பல தலைவர்களுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்து வென்று மொராஜி தேசாராய் மந்திரிசபையில் வெளியுறவு மந்திரியாக இடம் பிடித்தார்.

    ஜனதா கூட்டணி 1979-ல் கலைந்த பின்னர், அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் இணைந்து வாஜ்பாய் பா.ஜ.க.வை தொடங்கினார். கடின முயற்சி எடுத்து கட்சியை வளர்த்து காங்கிரசுக்கு நிகரான கட்சியாக அதனை மாற்றினார். 

    1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நாட்டின் பிரதரமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

    1996-1998 காலகட்டத்தில் இரண்டு முறை ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் வீழ்ச்சியடைய, ஆட்சி கலைக்கப்பட்டது, மறுபடியும் தேர்தல் நடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். 13 மாதங்கள் கழித்து, அ.தி.மு.க. தனது ஆதரவை திரும்ப பெற்றதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். 

    பின்னர் 1999 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்களைக் கைப்பற்றியது. வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த முறை தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.



    வாஜ்பாய் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், வெளியுறவுக்கொள்கை, பொருளாதார சீர்திருத்தங்கள், கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியா-பாகிஸ்தான் பேருந்து சேவை என உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. 

    குறிப்பாக இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேற்றம் அடைந்தது.  தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் ஏற்றம் கண்டன. 

    அரசியல்வாதி மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் என பனமுகத் திறமை கொண்ட வாஜ்பாய், இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

    உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், பல ஆண்டுகளாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாஜகவை விமர்சிப்பவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை செலுத்தும் வண்ணம் அவரது அரசியல் செயல்பாடுகள் இருந்தது. இந்த செயல்பாடுகள் மூலம் அவர் என்னென்றும் நினைவு கூறத்தக்க வகையில் இருப்பார்.
    கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள்.

    இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி, மந்திரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். 
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #PMModi #Vajpayee
    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 11-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 92 வயதான வாஜ்பாயை பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 10-15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.


    இதற்கிடையே, பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூப்பு தொடர்பான தேசிய மையத்திற்கான அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே உள்ள சப்தர்ஜுங் மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை, அன்சாரி நகர் மற்றும் விபத்து முகாமிற்கு இடையே மோட்டார் சுரங்கப்பாதை வசதியை தொடங்கி வைத்தார்.  #PMModi #Vajpayee

    ×