செய்திகள்

மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயன்று கடலுக்கு பலியான வாலிபர் - காக்கிநாடாவில் சோகம்

Published On 2018-06-24 14:54 GMT   |   Update On 2018-06-24 14:54 GMT
ஆந்திர மாநிலம், காக்கிநாடா கடற்கரையில் இன்று கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Mandrowns #Kakinadabeach
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் உள்ள கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானவர்கள் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பேரலையில் சிக்கிய சிறுவன் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதை பார்த்த ஒரு வாலிபர் நீருக்குள் பாய்ந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவர் சிறுவனை சென்றடைவதற்குள் அடுத்தடுத்து வந்த பெரிய அலைகள் அந்த வாலிபரை சுருட்டி, கடலுக்குள் கொண்டு சென்றது.

இதைகண்ட வேறு சிலர் கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆனால், அவனை காப்பாற்ற முயன்று உயிர் தியாகம் செய்த வக்கலப்புடி பகுதியை சேர்ந்த பூலோகம்(27) என்பவரின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Mandrowns #Kakinadabeach
Tags:    

Similar News