செய்திகள்

ஹிங்கிலீஸ் மொழியிலும் மாணவர்கள் தேர்வெழுதலாம் - ம.பி மருத்துவ பல்கலை அறிவிப்பு

Published On 2018-05-31 14:43 GMT   |   Update On 2018-05-31 14:43 GMT
மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஸ் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால்:

மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் அம்மாநிலத்தில் 312 கல்லூரிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பல பட்டய படிப்புகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பயிற்று விக்கப்படுகிறது. இந்நிலையில், இனிவரும் தேர்வுகளை மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஷ் ஆகிய மொழிகளில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிங்கிலீஸ் என்பது இந்தியையும் இங்கிலீஷையும் கலந்து எழுதும் வகையாகும். அதாவது பேசும் இந்தியை ஆங்கில எழுத்தில் எழுதும் முறை. தமிழ் உள்ளிட்ட எல்லா பிராந்திய மொழிகளும் இவ்வாறு எழுதப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் தங்களுக்கு பதில் தெரிந்தும் ஆங்கில புலமை இல்லாததால் பதில் எழுத சிரமப்படுகின்றனர்.

இதன் காரணமாக இந்தியையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுத அனுமதித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 
Tags:    

Similar News