செய்திகள்

டெல்லியில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2018-05-21 02:10 GMT   |   Update On 2018-05-21 02:42 GMT
ரஷிய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து ரஷியாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.#VladimirPutin #NarendraModi
ரஷிய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று சோச்சி நகருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.

இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டார். ரஷியாவின் சோச்சி நகரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இன்று அவர் சந்தித்து பேசுகிறார்.#VladimirPutin #NarendraModi
Tags:    

Similar News