செய்திகள்
ராமரின் மறுஅவதாரம் மோடி உ.பி எம்.எல்.ஏ பெருமிதம்
ராமரின் மறு அவதாரம் தான் பிரதமர் நரேந்திர மோடி என உத்தரப்பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். #Modi #LordRam #SurendraSingh
பாலிலா:
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாலிலா சட்டமன்றம் தொகுதி உறுப்பினர் சுரேந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் ராமர் மற்றும் லட்சுமனரின் மறு அவதாரம் என தெரிவித்தார். மேலும், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆத்தியநாத் ஆகியோர் இணைந்து ராம ராஜ்ஜிய கனவை நனவாக்குவார்கள் என அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பநகை என்றும் பெண்களின் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் பெற்றோர்கள் தான், பிள்ளைகளை வெளியே உலவ விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் குற்றம் நடைபெறாது என பல்வேறு சர்ச்சை கருத்துக்களை சுரேந்தர் சிங் முன்னர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #Modi #LordRam #SurendraSingh
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாலிலா சட்டமன்றம் தொகுதி உறுப்பினர் சுரேந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் ராமர் மற்றும் லட்சுமனரின் மறு அவதாரம் என தெரிவித்தார். மேலும், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆத்தியநாத் ஆகியோர் இணைந்து ராம ராஜ்ஜிய கனவை நனவாக்குவார்கள் என அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பநகை என்றும் பெண்களின் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் பெற்றோர்கள் தான், பிள்ளைகளை வெளியே உலவ விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் குற்றம் நடைபெறாது என பல்வேறு சர்ச்சை கருத்துக்களை சுரேந்தர் சிங் முன்னர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #Modi #LordRam #SurendraSingh