செய்திகள்
கான்பூர் ஐஐடி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
கான்பூர் ஐஐடி-யில் பி.ஹைச்.டி. பயின்று வந்த மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #kanpurIIT #studentsuicide
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடியில் பிரோசாபாத் நகரைச் சேர்ந்த பீம் சிங் என்ற மாணவர் பி.ஹைச்.டி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பீம் சிங் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு பீம் சிங் விடுதி அறையை விட்டு வெளியே வரமால் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்ப்வ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது பீம் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சிங்கின் நண்பர்கள் கூறுகையில் பீம் சிங் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினர். அவருடைய அறையில் தற்கொலை கடிதம் ஒன்று கிழிந்த நிலையில் கிடந்துள்ளது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். #kanpurIIT #studentsuicide
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடியில் பிரோசாபாத் நகரைச் சேர்ந்த பீம் சிங் என்ற மாணவர் பி.ஹைச்.டி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பீம் சிங் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு பீம் சிங் விடுதி அறையை விட்டு வெளியே வரமால் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்ப்வ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது பீம் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சிங்கின் நண்பர்கள் கூறுகையில் பீம் சிங் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினர். அவருடைய அறையில் தற்கொலை கடிதம் ஒன்று கிழிந்த நிலையில் கிடந்துள்ளது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். #kanpurIIT #studentsuicide