செய்திகள்

விமானப் பணிப்பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏர் இந்தியா ஊழியர்

Published On 2018-03-23 11:07 GMT   |   Update On 2018-03-23 11:07 GMT
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு தவறான உணவு வழங்கிய பணிப்பெண்ணை சக ஊழியர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #airindia
புதுடெல்லி:

டெல்லியிலிருந்து ஜெர்மனி செல்லும் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானத்தில் கடந்த சனிக்கிழமை ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று பெண் ஊழியர் உணவு வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பயணிக்கு சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை தெரியாமல் பரிமாறினர். இது குறித்து பயணி மேலதிகாரியிடம் தெரிவித்ததை அடுத்து பிரச்சனை தீர்க்கப்பட்டது.

ஆனால், அந்த மேலதிகாரி பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து பெண் ஊழியர் ஏர் இந்தியா நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தவறான உணவு வழங்கியதற்காக பெண் ஊழியர் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #airindia #tamilnews

Tags:    

Similar News