செய்திகள்
மகாராஷ்டிரா: ஆட்டோ ரிக்ஷாவில் திடீர் தீ - 3 பேர் உடல் கருகி பலி
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பற்றிய திடீர் தீயில் சிக்கி அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பற்றிய திடீர் தீயில் சிக்கி அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் அகமது நகரின் சந்தா என்ற பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தினர் ஆட்டோ ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆட்டோவில் தீப்பிடித்தது. அந்த தீயில் சிக்கி அதில் பயணம் செய்த நமிரா குரேஷி (8), மகேவிஷ் குரேஷி (7) மற்றும் ஜுனத் குரேஷி (55) ஆகிய 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பற்றிய திடீர் தீயில் சிக்கி அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் அகமது நகரின் சந்தா என்ற பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தினர் ஆட்டோ ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆட்டோவில் தீப்பிடித்தது. அந்த தீயில் சிக்கி அதில் பயணம் செய்த நமிரா குரேஷி (8), மகேவிஷ் குரேஷி (7) மற்றும் ஜுனத் குரேஷி (55) ஆகிய 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.