செய்திகள் (Tamil News)

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு

Published On 2018-01-08 21:45 GMT   |   Update On 2018-01-08 21:45 GMT
வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் வருகிற 11-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.



இதற்கிடையே தொழில் விஷயமாக 10-ந் தேதி (நாளை) முதல் 20-ந் தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் விசாரணை தொடங்கியதுமே, இந்த மனுவை வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News