செய்திகள்
ஒடிசா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் மீது பொதுமக்கள் ஆவேச தாக்குதல்
ஒடிசா மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து பின்னர் போலீசிடம் ஒப்படைத்தனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்து ஒரு மாத காலமாக அவர் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களுடன் இணைந்து ஆசிரியை கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்து ஒரு மாத காலமாக அவர் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களுடன் இணைந்து ஆசிரியை கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.