செய்திகள்
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நேற்றிரவு 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நேற்று மாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4:49 மணியளவில் போர்ட் பிளேர் நகருக்கு கிழக்கே 121 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கு அடியில் 139.8 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நேற்று மாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4:49 மணியளவில் போர்ட் பிளேர் நகருக்கு கிழக்கே 121 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கு அடியில் 139.8 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.