செய்திகள்
ராஜஸ்தானின் முதல் திருநங்கை கான்ஸ்டபிளாக கங்கா குமாரி நியமனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறையாக திருநங்கை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளாக பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கங்கா குமாரி. திருநங்கையான இவர் கடந்த 2013 ம் ஆண்டு போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு பணி வழங்கப்பட வில்லை. அதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து 2015 ம் ஆண்டு போலீஸ் துறையில் ஆறு வாரங்களில் சேர அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் திருநங்கை என்பதால் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை.
இது தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. திருநங்கைகளை தனி பாலினமாக அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கங்கா குமாரிக்கு கான்ஸ்டபிள் வேலை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் அரசு பணியில் நியமனம் செய்யப்பட்ட 3 வது திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகள் தனி பாலினமாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர்கள் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு பணிகளில் எளிதான நுழைகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கங்கா குமாரி. திருநங்கையான இவர் கடந்த 2013 ம் ஆண்டு போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு பணி வழங்கப்பட வில்லை. அதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து 2015 ம் ஆண்டு போலீஸ் துறையில் ஆறு வாரங்களில் சேர அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் திருநங்கை என்பதால் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை.
இது தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. திருநங்கைகளை தனி பாலினமாக அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கங்கா குமாரிக்கு கான்ஸ்டபிள் வேலை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் அரசு பணியில் நியமனம் செய்யப்பட்ட 3 வது திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகள் தனி பாலினமாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர்கள் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு பணிகளில் எளிதான நுழைகின்றனர்.