செய்திகள்

விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை பரமசிவன் எனக்கு அருளினார்: பிரதமர் மோடி உருக்கம்

Published On 2017-10-08 12:37 GMT   |   Update On 2017-10-08 12:37 GMT
குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது என்மீது பலர் கக்கிய விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை கடவுள் பரமசிவம் எனக்கு அருளினார் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அகமதாபாத்:

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜாம்நகர் வந்தார்.

இன்று தனது பிறந்த ஊரான வாத்நகருக்கு காரில் சென்றார். அவர் பிரதமரான பிறகு இங்கு செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே அங்கு வழிநெடுக கூடியிருந்த பொதுமக்கள் அவர் மீது மலர்களை தூவி வரவேற்றனர்.

சிறு வயதில் படித்த பள்ளிக்கு சென்ற மோடி, அங்கிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசி கொண்டார். வாத்நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 2001-ம் ஆண்டுவாக்கில் நான் இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்தபோது என்மீது பெரும் பழிகள் சுமத்தப்பட்டன. என்மீது பலர் விஷத்தை கக்கினார்கள். அப்போது, விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை கடவுள் பரமசிவம் எனக்கு அருளினார்.

அந்த சக்திதான் எனது தாய்நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இத்தனை காலம் பாடுபடும் பலத்தை தந்தது என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News