செய்திகள்

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. மாயம்

Published On 2017-06-26 08:24 GMT   |   Update On 2017-06-26 08:24 GMT
திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமலை:

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் புரகம்பாடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குஞ்சா பிட்சம் (வயது72). நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் மாயமாகி விட்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

குஞ்சாபிட்சம் கோவிலில் இருந்து அன்னதான குடோன் வரும் பதிவுகள் உள்ளன. அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார். என்பது தெரியவில்லை. திருமலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முலம் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News