செய்திகள்

காஷ்மீர்: ஹில்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Published On 2017-06-21 20:50 GMT   |   Update On 2017-06-21 20:50 GMT
காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்றிரவு அங்கு தீவிர சோதனை நடத்தினர்.

அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

மேலும், அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? எனவும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மற்றும் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News