செய்திகள்

சுற்றுச் சூழல் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் மரம் நட்டார் ஹர்ஷ் வர்தன்

Published On 2017-05-22 08:13 GMT   |   Update On 2017-05-22 08:13 GMT
மத்திய மந்திரி அனில் மாதேவ் தவே உடல்நிலைக் குறைவால் காலமானதை அடுத்து, சுற்றுச் சூழல் அமைச்சராக ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்றுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் அனில் மாதேவ் தவே கடந்த மே 18-ம் தேதி உடல்நிலைக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.

அனில் மாதவ் மறைவை அடுத்து அவர் வகித்து வந்த துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் சுற்றுச் சூழல் அமைச்சராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடன் மறைந்த மந்திரி தாவே நினைவாக மரக்கன்றினை நட்டார். 



முன்னதாக, மறைந்த அனில் மாதேவ் தவே இறப்பதற்கு முன்பாக தனது நினைவிடம் வேண்டாம், மரம் நடுங்கள் போது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News