செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் அதிரடி தாக்குதல்

Published On 2017-04-26 15:10 GMT   |   Update On 2017-04-26 15:11 GMT
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா:

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது நக்சலைட்டுகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த அழகுபாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்பட 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

துணிச்சலுடன் போராடிய படை வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்று மத்திய உள்துறை மந்திரி ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் சுக்மா மாவட்டத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளே புகுந்து சரமாறியாக சுட்டனர் இதில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 5 நக்சலைட்டுகள்  காயம் அடைந்தனர். தொடர்ந்து நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News