செய்திகள்

விமான பணிப்பெண்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இங்கிலாந்து நாட்டவர்கள் இருவர் கைது

Published On 2017-04-01 18:22 GMT   |   Update On 2017-04-01 18:22 GMT
நடுவானில் விமான பணிப்பெண்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இருவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
புதுடெல்லி:

லண்டனில் இருந்து புதுடெல்லிக்கு நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு நபர்கள் பணியில் இருந்த விமான பணிப்பெண்களிடம் தேவையற்ற வார்த்தைகளை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். விமானம் இன்று புதுடெல்லியில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண்கள் விமான நிறுவன மேலாளரிடம் சென்று புகாரளித்துள்ளனர்.



அதையடுத்து, விமான நிறுவனம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகரையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரிடமும் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் குடிபோதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து பின்னர், அவர்களின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானத்தில் பயணிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நிறுவனம் தலையிடாது, ஆனால், அது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Similar News