செய்திகள்

உ.பி: கார் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2017-03-25 10:49 GMT   |   Update On 2017-03-25 10:49 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.டெக் படித்து வரும் மாணவர் விவேக், நேற்று இரவு 18-வ்து செக்டார் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வேகமாக வந்த கார் ஒன்று திடீரென விவேக் மீது பலமாக மோதியது. கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விவேக்கை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை கண்டுபிடித்து கைது செய்துள்ள போலீசார், அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Similar News