செய்திகள்
கோவா சட்டசபை சபாநாயகராக பிரமோத் சாவந்த் தேர்வு
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறும் யூனியன் பிரதேசமான கோவா சட்டசபை சபாநாயகராக பிரமோத் சாவந்த் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பனாஜி:
கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 13 இடங்களில் வென்ற பா.ஜ.க சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறிய மனோகர் பாரிக்கர், ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி மாலை தலைநகர் பனாஜியில் மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இந்த நிலையில், இன்று கோவா சட்டசபை சபாநாயகர் தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் சங்காலி தொகுதி எம்.எல்.ஏ.வான பிரமோத் சாவந்த் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 13 இடங்களில் வென்ற பா.ஜ.க சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறிய மனோகர் பாரிக்கர், ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி மாலை தலைநகர் பனாஜியில் மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இந்த நிலையில், இன்று கோவா சட்டசபை சபாநாயகர் தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் சங்காலி தொகுதி எம்.எல்.ஏ.வான பிரமோத் சாவந்த் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.