செய்திகள்
ஆந்திராவில் இன்று டிராக்டர் டிராலி கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் இன்று தறிகெட்டு ஓடிய டிராக்டர் டிராலி கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் இன்று தறிகெட்டு ஓடிய டிராக்டர் டிராலி கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிலரை ஏற்றிச் சென்ற அந்த டிராக்டர் போருமமில்லாப்பள்ளி வழியாக சென்றபோது ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பிரகாசம் மாவட்டம் ஜன்கம்குன்ட்டலா பகுதியை சேர்ந்த நாகேந்திரா(25), புல்லா ரெட்டி(42) ஸ்ரீராமுலு(48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் பத்துபேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் இன்று தறிகெட்டு ஓடிய டிராக்டர் டிராலி கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிலரை ஏற்றிச் சென்ற அந்த டிராக்டர் போருமமில்லாப்பள்ளி வழியாக சென்றபோது ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பிரகாசம் மாவட்டம் ஜன்கம்குன்ட்டலா பகுதியை சேர்ந்த நாகேந்திரா(25), புல்லா ரெட்டி(42) ஸ்ரீராமுலு(48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் பத்துபேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.